உள்ளூர் செய்திகள்

குழந்தையை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-08-18 10:19 GMT   |   Update On 2022-08-18 10:19 GMT
  • தருண் ஆதித்யா (4) என்பவர் கடந்த மாதம் 7- ந்தேதி நள்ளிரவு காணாமல் போய்விட்டார்.
  • பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி வந்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லோக நாதன். மனைவி கவுரி (வயது 35), இவரது குழந்தை தருண் ஆதித்யா (4) என்பவர் கடந்த மாதம் 7- ந்தேதி நள்ளிரவு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து கவுரி கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி குழந்தை யை கடத்திய கச்சிராபாளை யம் அருகே ஊத்தோடை, அக்கரைக்காடு பகுதி யைச் சேர்ந்த சுந்தர சோழன் (42), கச்சிராயபாளை யம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்டர்ஜாய் (33), கல்வராயன் மலை அருகே சுண்டகபாடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வம்(29), இதே கிராமத்தைச்சேர்ந்த ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

கைதான அனைவரும் தொடர்ந்து மேற்படி கிராமத்தில் பொது அமை திக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் குழந்தையை கடத்திய குற்றச்செயலில் ஈடுபட்ட துடன் பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி யும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி வந்தனர். எனவே இவர்கள் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொட ர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட க்கூடும் என்பதால், இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பகலவன் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல்  சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மேற்படி நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு க்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 4 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News