உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கடத்தல்; வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-10-19 09:00 GMT   |   Update On 2022-10-19 09:00 GMT
  • பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று விட்டார்.
  • போலீ்சார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

சுவாமிமலை:

சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் உத்திகை தெருவில் வசிப்பவர் காசிநாதன் மகன் கவியரசன்(வயது 22). டிரைவர்.

இவர் அதே ஊரில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்துள்ளார்.

இதனால் இந்த பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி ஊரை விட்டு அழைத்து சென்று விட்டார்.

இது குறித்து பெண்ணை காணவில்லை என பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீ்சார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கவியரசனை போலீசார்கைது செய்து அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News