உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகத்தில் விஷ கதண்டுகள் அகற்றம்

Published On 2023-11-03 06:48 GMT   |   Update On 2023-11-03 06:48 GMT
பள்ளி வளாகத்தில் விஷ கதண்டுகள் அகற்றம்

வேலாயுதம் பாளையம்,  

கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறம் மற்றும் பின்புறம் பல்வேறு வகையான மரங்கள் உள்ளது . அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அந்த பகுதிக்கு செல்லும் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது . இது குறித்து தலைமை ஆசிரியை வளர்மதி புகளூர் தீயணைப்பு துறை நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக் கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்.இதனால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News