உள்ளூர் செய்திகள்
- போக்சோ வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
கரூர்:
கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி சோளகாளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சசிக்குமார், (வயது 24) எலெக்ட்ரீஷியன். இவர், கரூர் மாவட்டம் ஏமூர் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, தான் தோன்றிமலை வட்டார பெண்கள் நல அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சசிக்குமார் மீது கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.