உள்ளூர் செய்திகள்

தோகைமலையில் - வாக்காளர் பட்டியலில் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-18 06:23 GMT   |   Update On 2023-11-18 06:23 GMT
  • கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
  • இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

குளித்தலை

கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

தோகைமலை ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது, தோகைமலை பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மாணவர்கள், வாக்காளர் பட்டியில் திருத்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணி, தீபக் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலரின உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News