உள்ளூர் செய்திகள்
டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது
- டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
கரூர் தேவகவுண்டனூரை சேர்ந்தவர் திராவிடமணி (வயது 46). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வெள்ளியணை தெற்கு பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் டீக்கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி திராவிடமணியிடம் இருந்து ரூ.150-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.