உள்ளூர் செய்திகள்

டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது

Published On 2023-06-11 13:44 IST   |   Update On 2023-06-11 13:44:00 IST
  • டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் :

கரூர் தேவகவுண்டனூரை சேர்ந்தவர் திராவிடமணி (வயது 46). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வெள்ளியணை தெற்கு பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் டீக்கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி திராவிடமணியிடம் இருந்து ரூ.150-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News