நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் பெற்றுத்தந்த எம்.எல்.ஏ.வுக்கு நன்றி
- நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் பெற்றுத்தந்த எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கபட்டது
- குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
குளித்தலை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிட்ட முதல் தொகுதியான குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பரிந்துரைப்படி, குளித்தலை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான நங்கவரம் பகுதிக்கு புதிய காவல் நிலையம் வேண்டி குளித்தலை நகர தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குளித்தலை இரா.மாணிக்கம் சட்டமன்றத்தில் எடுத்துரைத்து நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவிலான புதிய காவல் நிலையம் பெற்று தந்தமைக்கும், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் நங்கவரம் பேரூராட்சி மக்களின் சார்பாக முத்து (எ) சுப்பிரமணி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏ. இரா.மாணிக்கத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி நச்சலூர் சங்கர், ஒன்றிய பிரதிநிதி செல்வம், விவசாய அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், தோகைமலை தி.மு.க. இளைஞரணி செயலாளர் சசிகுமார், நெய்தலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.