உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணராயபுரம் அருகே வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

Published On 2023-06-22 13:44 IST   |   Update On 2023-06-22 13:44:00 IST
  • கிருஷ்ணராயபுரம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
  • சத்துணவுத்திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலராஜபுரம், மாயனூர் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.70 லட்சம் மதிப்பிலான புதிய 2 வகுப்பறை கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதையும், அதேப்பள்ளியில் சத்துணவுத்திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பாலாராஜபுரம், நத்தமேடு பகுதியில் பாரத பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தனி நபருக்கு வீடு கட்டும் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதையும், மாயனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 15-வது நிதி குழுத் திட்டத்தின் கீழ் ரூ.7.51 லட்சம் மதிப்பிலான பள்ளி வகுப்பறைகள் கட்டடங்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து மாயனூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.46 லட்சம் மதிப்பிலான 3 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடப்பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு அப்பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர் இளஞ்சேரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பாலாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தவசந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News