உள்ளூர் செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

Published On 2022-12-23 15:29 IST   |   Update On 2022-12-23 15:29:00 IST
  • விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கரூர்:

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை விநாயகா், ஓம் சக்தி நகர் கற்பக விநாயகர் உள்பட பல்ேவறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News