உள்ளூர் செய்திகள்

மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

Published On 2022-10-28 11:37 IST   |   Update On 2022-10-28 11:37:00 IST
  • மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • கரூர் - வாங்கல் சாலையில்

கரூர்,

கரூர் -வாங்கல், நாமக்கல் மோகனூர் பகுதிகளை இணைக்கும் வகையில், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே, 2016ல் புதிய உயர் மட்ட பாலம் கட்டப்பட் டது. இதனால், மோகனூரில் இருந்து, கரூர் நகருக்குள் நாள் தோறும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. மேலும், கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மோகனூர் தினசரி சந்தைக்கு, விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்கின்றனர். வாங்கல் பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது. மேலும் மணல்கள், சென்டர் மீடியன் ஓரம் குவிந்துள்ன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வரு கின்றனர்.எனவே, கரூர் சாலையில் போதிய மின் விளக் குகள் அமைக்க, சம்மந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

.

Tags:    

Similar News