உள்ளூர் செய்திகள்

சிக்னல் விளக்குகள் சீரமைக்கப்பட கோரிக்கை

Published On 2022-10-17 15:29 IST   |   Update On 2022-10-17 15:29:00 IST
  • சிக்னல் விளக்குகள் சீரமைக்கப்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

கரூர்

கரூர், ஆண்டாங்கோவில் பிரிவில் சேதமடைந்த சிக்னல் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர், ஆண்டாங்கோவில் பிரிவில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. தற்போது, அவை சேதமடைந்து சிக்னல் விளக்குகள் எரிவதில்லை. இதனால், வர்த்தக நிறுவனங்கள், உழவர் சந்தை உள்ள ஆண்டாங்கோவில் பிரிவில், அடிக்கடி வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. எனவே, சேதமடைந்த சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News