உள்ளூர் செய்திகள்

மூதாட்டி திடீர் சாவு

Published On 2023-06-09 06:29 GMT   |   Update On 2023-06-09 06:29 GMT
  • மூதாட்டி திடீர் இறந்தார்.
  • இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் :

தென்னிலையில் உள்ள கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News