உள்ளூர் செய்திகள்

குட்கா விற்ற வாலிபர் கைது

Published On 2022-10-29 15:04 IST   |   Update On 2022-10-29 15:04:00 IST
  • குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

கரூர்:

கரூர் அருகே, புகையிலை பொருட்கள், குட்கா விற்றதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பானுமதி மற்றும் போலீசார், சின்ன கோதுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவற்றை விற்றதாக ஜெயபெருமாள் (வயது 33) என்பவரை, கைது செய்து ேபாலீஸ் நிலையத்திற்கு அழைத்து ெசன்று, வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News