உள்ளூர் செய்திகள்

கரூரில் கல்விக் கடன் முகாம்

Published On 2023-08-31 11:56 IST   |   Update On 2023-08-31 11:56:00 IST
  • கரூரில் பல்வேறு பகுதிகளில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது
  • கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடன் முகாம் நடக்கிறது. இதில், கரூர் மாநகராட்சி, கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்கள், டவுன் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வரும், 2 அன்று செங்குந்தபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கிறது.டவுன் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மாணவர்களுக்கு 4 அன்று அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

கடவூர் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியங்கள், டவுன் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வரும், 5 அன்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

குளித்தலை நகராட்சி, குளித் தலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியங்கள், டவுன் பஞ்சாயத் துகளில் வரும், 7ல் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூறப்பட்டுள்ளது.இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண் கல்விக்கடன் பெற ஆலோசனை வழங்கப் படும். மேலும், www.vidyalakshmi. co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல் உள்பட உரிய சான்றுகளுடன் வர வேண்டும். விபரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04324234815, 94426 13165 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News