உள்ளூர் செய்திகள்

புஞ்சை தோட்டக்குறிச்சியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 2-வது நாளாக நள்ளிரவு வரை நீடித்த வருமானவரித்துறை சோதனை

Published On 2023-11-05 06:20 GMT   |   Update On 2023-11-05 06:20 GMT
  • திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
  • . தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் கடந்த2006-2011 ஆம் ஆண்டில் தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் தொழில் அதிபர் சக்திவேல். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை7.30 மணி அளவில் திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய 3 மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 7 மணி வரை சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை முடித்து விட்டு புறப்பட்டனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் 3-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சக்திவேலின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.பகல் 11.30 மணியளவில் வெளியில் சென்ற அதிகாரிகள் பகல் 12.30 மணி அளவில் மீண்டும் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர் .

நேற்று நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News