உள்ளூர் செய்திகள்
கழிவு நீர் வாய்க்காலை துார்வார கோரிக்கை
- கழிவு நீர் வாய்க்காலை துார்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- சாலையில் ஆறாக ஓடுகிறது.
கரூர்:
கரூர் அருகே, படிக்கட்டு துறை பகுதியில் சாக்கடை வாய்க்கால் செல் கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கழிவு நீர் வாய்க்காலில், புதர்கள் மண்டியுள்ளதால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. மேலும் மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் மழைக்காலங்களில் சாலையில் ஆறாக ஓடி தேங்கி நிற்கிறது. எனவே, சுகாதார கேட்டை தடுக்க, படிக்கட்டு துறை பகுதியில் செல்லும், சாக்கடை வாய்க்காலை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.