உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க கோரிக்கை

Published On 2022-10-31 13:57 IST   |   Update On 2022-10-31 13:57:00 IST
  • சாலையில் சுற்றிதிரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
  • குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்

கரூர்:

கரூர் நகரில் சுற்றி திரியும் மனநலம் பாதிக் கப்பட்டவர்களை, அவர் களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர், கல்யாண பசுப தீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்து வமனை, ஜவஹர் பஜார், தான்தோன்றிமலை வெங் கடரமண சுவாமி கோவில், சாய்பாபா கோவில் உள் ளிட்ட பகுதிகளில், மன நிலை பாதிக்கப்பட்ட வர்கள் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.

இவர்களில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கோவை சாலையில் வாகனங்கள் செல்லும் எதிர் திசையில் ஓடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார். மற்ற பகுதிகளிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட் டவர்களை, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசார், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோல், கரூரில் சுற்றிதிரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

Tags:    

Similar News