உள்ளூர் செய்திகள்

கள்ளசந்தையில் மதுபாட்டில் விற்ற ஒருவர் கைது

Published On 2023-06-19 14:05 IST   |   Update On 2023-06-19 14:05:00 IST
  • க.பரமத்தி பகுதியில் மதுபாட்டில் பதுக்கி விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
  • அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

கரூர்,

க.பரமத்தி பகுதியில் மது பாட்டில் பதுக்கிய வழக்கில் ஒருவர் மீது க.பரமத்தி போலீசார் வழக்குபதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். க.பரமத்தி அடுத்த முள் காட்டு பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப் போது திருவாரூர் மாவட்டம் கருவகுறிச்சி பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் வீரமணி(வயது 42) என்பவர் க.பரமத்தி அடுத்த முள் காட்டு பகுதியில் மது விற்ப னைக்காக 5 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட் டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் க.பரமத்தி போலீசார் வீரமணி மீது கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Tags:    

Similar News