உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே மதுப்பாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது

Published On 2023-06-16 12:44 IST   |   Update On 2023-06-16 12:44:00 IST
  • குளித்தலை அருகே மதுப்பாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது செய்யபட்டனர்
  • போலீசார் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின்பேரில் குளித்தலை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் இரும்பூதிபட்டியில் இருந்து குப்பாச்சிபட்டி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் 76 மது பாட்டில்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் போத்தராவுத்தன்பட்டி குமார் (வயது 48), வெள்ளாளப்பட்டி ராமகிருஷ்ணன் (40), கிளரிபட்டி சிவலிங்கம் (54), வேளாண்காட்டுப்பட்டி நீளமேகம் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News