குளித்தலை அருகே தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது
- குளித்தலை அருகே தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யபட்டனர்
- காயமடைந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சின்னையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 21). சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 18-ந் தேதி தனக்கு சொந்தமான ஆட்டோவில் இரும்பூதிப்பட்டி-பாப்பக்காபட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த சிவா (36), டிரைவர் சவுந்தரபாண்டியன் (47), கருணாநிதி (60), கோபி (32), மணிகண்டன் (29) ஆகிய 5 பேரும் நந்தகுமாரை வழி மறித்து தாக்க முயற்சித்தனர்.
இவர்களிடமிருந்து தப்பித்து நந்தகுமார் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து வீட்டுக்கு வந்த 5 பேரும் வீட்டு ஓடுகளை சேதப்படுத்தி டிரைவர் நந்தகுமாரையும், அவருடை தாயையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். பின்னர் நந்தகுமார் குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் நந்தகுமாரை தாக்கிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சிவா, சவுந்தரபாண்டியன், கருணாநிதி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.