உள்ளூர் செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-02 07:17 GMT   |   Update On 2023-06-02 07:17 GMT
  • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

கரூர்:

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கல்லடை அண்ணாநகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி ஜல்ஜா (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செஞ்சேரிவலசை சேர்ந்த சதீஷ்குமார் ( 37) என்பவர் அப்பகுதியில் உள்ள காட்டுபகுதியில் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News