உள்ளூர் செய்திகள்

பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரசு பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

Published On 2023-10-28 09:15 GMT   |   Update On 2023-10-28 09:15 GMT
  • விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார்.
  • பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவரையும் வரவேற்றார்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் உதயம் முருகையன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர். சுந்தரராஜன், ஆத்மா குழு உறுப்பினர் மகாகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவ ரையும் வரவேற்றார். தொடர்ந்து, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News