உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Published On 2023-05-31 11:17 GMT   |   Update On 2023-05-31 11:17 GMT
  • குமரி மாவட்ட 4 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்
  • முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை

கன்னியாகுமாரி:

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

குமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைத் திட்டப் பணிகள், நான் பாராளு மன்ற உறுப்பினராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டலில் மத்திய சாலை போக்கு வரத்து மந்திரி நிதின் கட்கரி ஒப்புதல் மற்றும் உறுதுணையுடன் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில் எனது வேண்டுகோளை ஏற்று கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை யிலான 4 வழிச்சாலையில் சிறியதும், பெரியதுமாக 48 பாலங்கள் கட்ட மத்திய நெடுஞ்சாலைப் போக்கு வரத்து துறை ரூ.1141.78 கோடி நிதியை ஒதுக்கியது.

இதனால் குமரி மாவட்ட வளர்ச்சிக்கு என்றும் தனது முழு ஒத்துழைப்பை நல்கும் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தேன்.

நான் இன்று பாராளு மன்ற உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் எனது முயற்சியில் கொண்டு வந்த திட்டம் தொய்வின்றி தொடர்ந்து நடந்திட அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கும் போது, முழு ஆதரவை தரும் நிதின் கட்கரிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரி விப்பது எனது கடமை யாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News