உள்ளூர் செய்திகள்

நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-06-09 10:15 GMT   |   Update On 2023-06-09 10:15 GMT
  • நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
  • இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தங்களுடைய படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்து சரி செய்யும் பணிகள் மற்றும் வண்ணம் தீட்டுவது போன்ற பணி களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நீரோடி முதல் ராஜாக்கமங்க லம் வரை உள்ள மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்த ஆய்வில் மீனவருடைய படகுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, கட லுக்கு செல்லக்கூடிய அளவுக்கு தரமான முறையில் படகு உள்ளதா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இது போன்ற எல்லா விதமான ஆவணங்களை சரிசெய் பார்த்து அவர்கள் அதற்கான ஒப்புதல் செய்கின்றனர்.

இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள படங்களுக்கு மட்டும் தான் 100 லிட்டர் மண்எண்ணை மானியத்தில் வழங்கப்படு கிறது. கடலுக்கு சென்ற பிறகு ஏதாவது நேரிட்டால் அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்குவது போன்றவற்றிற்கு இது ஒரு முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News