உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

Published On 2023-11-02 12:32 IST   |   Update On 2023-11-02 12:32:00 IST
  • கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
  • கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி திருட்டுப்போன 2 மின் மோட்டார்களை மீட்டனர்

கொல்லங்கோடு :

கொல்லங்கோடு பகுதிக்குட்பட்ட வள்ளவிளை பாரிகடவு பகுதியை சேர்ந்த நிஜா (வயது 34) மற்றும் வள்ளவிளை பகுதியை சேர்ந்த மேரி விமலா ஆஷா (33) ஆகியோருக்கு சொந்தமான மின்மோட்டாரை கடந்த மே மாதம் மர்ம நபர் திருடி சென்றார். இந்த திருட்டு சம்பந்தமாக மஞ்ச தப்பு காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35) மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் கணேஷ்குமார் அம்பலகுளம் பகுதியில் வைத்து ராஜேஷை மடக்கி பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி திருட்டுப்போன 2 மின் மோட்டார்களை மீட்டு ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News