உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-07-20 12:55 IST   |   Update On 2023-07-20 12:55:00 IST
  • மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்ததில் கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு கருவஞ்சான் விளையை சேர்ந்தவர் வில்பிரட் சேம் (வயது 51).

இவர் பரக்குன்று பகுதியில் உள்ள மர அறுவை மில்லில் பணிபுரிந்து வந்தார். இவரது மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்ததில் கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வில்பிரட் சேம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஓமனா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News