உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2023-09-04 13:04 IST   |   Update On 2023-09-04 13:04:00 IST
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கிங்ஸ்லின் சுதித் பரிதாபமாக இறந்தார்.

திருவட்டார் :

திருவட்டார் அருகே உள்ள அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் கிங்ஸ்லின் சுதித் (வயது 35), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கிங்ஸ்லின் சுதித் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து அவர் வெளியே சென்றார். அதன்பிறகு இரவில் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கிங்ஸ்லின் சுதித் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அவரது உறவினர் சிங் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கிங்ஸ்லின் சுதித்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கிங்ஸ்லின் சுதித் பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் லைசம்மாள் புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News