உள்ளூர் செய்திகள்

தேரேக்கால்புதூர் அருகே இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2023-07-26 06:32 GMT   |   Update On 2023-07-26 06:32 GMT
  • 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
  • பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை

நாகர்கோவில் :

நாகர்கோவில் தேரைக் கால் புதூர் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதிய தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அந்தப்ப பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News