உள்ளூர் செய்திகள்

பிர்லன்ஜோஸ்

திருவட்டார் அருகே கடற்படை வேலைக்கு சென்றவர் மாயம்

Published On 2022-10-11 07:14 GMT   |   Update On 2022-10-11 07:14 GMT
  • மீட்டு தரக்கோரி மனைவி போலீசில் புகார்
  • போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து மாயமான பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே சூசக்குடிவிளை, பூந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனிஷா (வயது 25). இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் பிர்லன்ஜோஸ் (28). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடற்படையில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது விசாகபட்டினத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்தார்.

அதன்பிறகு உடல் சரியான பிறகு கடந்த மாதம் மீண்டும் விசாகப்பட்டினம் கடற்படை தளத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு குடும்பத்தா ருக்கு போன் செய்யவில்லை.

நேற்று விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் எனது கணவர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் வந்துசேரவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள். பிர்லன்ஜோஸ் மாயமானதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News