உள்ளூர் செய்திகள்

குளச்சல் கடலில் மாயமானவரை தேடும் பணி தீவிரம்

Published On 2022-08-20 15:17 IST   |   Update On 2022-08-20 15:17:00 IST
  • மீனவர் உடை கரை ஒதுங்கியதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்
  • சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்ததில் அலையில் சிக்கிக் கொண்டார்.

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40), மீன்பிடித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பகலில் வலையை கடலில் வீசிவிட்டு இரவில் வழக்கம்போல் வலையை இழுக்க சென்றார்.

அப்போது சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்தார். இதில் அலையில் அவர் சிக்கிக் கொண்டார். மேலும் அலை யில் அவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் அவ ரது உறவினர் ஸ்டான்லி புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் வழக்குப்பதிவு செய்து மாயமான மீனவர் தேவதாசனை தேடும் பணி யில் ஈடுபட்டார்.

இன்று 3- வது நாளாக மரைன் போலீசார் மற்றும் உறவினர்கள் 5 வள்ளங்களில் சென்று தேவ தாசனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மாயமான மீனவர் தேவதாசனின் லுங்கி கடல் அலையில் இன்று கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாமோ? என குடும்பத்தினர் பீதியடைந்து உள்ளனர். அவர்கள் சோகத்துடன் கடற்கரையிலேயே அமர்ந்துள்ளனர்.

மாயமான மீனவர் தேவதாசனுக்கு, ஜெகதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

Similar News