உள்ளூர் செய்திகள்
திருவட்டாரில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி இல்லை
- திருவட்டார் பேருராட்சி சார்பாக அறிவிப்பு
- கும்பாபிஷேக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதிகேசவன் கோவில் கும்பாபிஷேக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மெயின் ரோட்டில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்க கூடாது என்று பக்தர்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கை ஏற்று பேருராட்சி சார்பாக அந்த பகுதியில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது.