உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே தமிழக அரசின் புகைப்படக் கண்காட்சி

Published On 2022-08-18 14:08 IST   |   Update On 2022-08-18 14:08:00 IST
  • மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்,
  • இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம்

நாகர்கோவில் :

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காஞ்சிரவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்-அமைச் சர் தொடங்கி வைத்த திட்டங்களான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக் கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கி களில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குற வர்கள் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், நமக்கு நாேம திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், காணி பழங்குடியி னர்களுக்கு நில உரிமை ஆணை வழங்கியது. மீனவர் களின் நலன் கருதி பனிக் கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கியது.

முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், பதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் பணியின்போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News