உள்ளூர் செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வழங்கினார்
- பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிரேசி எவாஞ்சல் தலைமை தாங்கினார்
கன்னியாகுமரி :
மங்கலகுன்று புனித பெர்னதெத் மேல்நிலைப்பள்ளியில் அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிரேசி எவாஞ்சல் தலைமை தாங்கினார். விழாவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் டிஜீ, தாளாளர் பிலிப் ஆரோக்கிய திவியன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.