உள்ளூர் செய்திகள்

கோட்டார், தெங்கம்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2023-07-05 06:39 GMT   |   Update On 2023-07-05 06:39 GMT
  • தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் 6-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்
  • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக் கட்டிப்பொட்டல், ஒசர விளை, காட்டுவிளை, புதூர், ஈத்தா மொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன் விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்க விளை, புத்தன்துறை, ராஜாக்கமங் கலம், ஆலன் கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக் குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இந்த நேரத்தில் மின் பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News