குமரியில் கொட்டி தீர்க்கும் மழை
- இரணியலில் 26 மில்லி மீட்டர் பதிவு
- மழையின் காரணமாக விவசாயிகள் கும்பபூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசுகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.
இரணியலில் அதிகபட்ச மாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப் பட்டது.
அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், தக்கலை, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. அருவி யில் வெள்ளம் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களிலும் தண்ணீர் பெருகி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.40 அடியாக உள்ளது. அணைக்கு 538 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.80 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 12.8, பெருஞ்சாணி 6, சிற்றாறு 1-9.2, சிற்றாறு 2-4, பூதப்பாண்டி 3.2, களியல் 9.2, கன்னிமார் 2.4, கொட்டாரம் 5.2, குழித்துறை 11.5, மயிலாடி 10.4, நாகர்கோவில் 9.2, புத்தன் அணை 7.4, சுருளோடு 8.6, தக்கலை 12, குளச்சல் 12.4, இரணியல் 26, பாலமோர் 21.6, மாம்பழத்துறையாறு 6.2, திற்பரப்பு 8.7, கோழிப்போர்விளை 8.5, அடையாமடை 4.1, குருந்தன்கோடு 13.2, முள்ளங்கினாவிளை 8.2, ஆணைக்கிடங்கு 8.2, முக்கடல் 2.3.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் கும்பபூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் உழவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பரு மழை தொடர்ந்து கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.