உள்ளூர் செய்திகள்

என்.ஜி.ஓ. காலனி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-03-20 07:04 GMT   |   Update On 2023-03-20 07:04 GMT
  • தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு வீட்டில் வாந்தி
  • அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

கன்னியாகுமரி :

என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள குஞ்சன் விளையை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 73) கொத்தனார். கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்ததாகவும், குடிப்பழக்கம் உடையவராகவும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தம்பி சிவலிங்கம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News