உள்ளூர் செய்திகள்

நாகர். கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-24 09:38 GMT   |   Update On 2023-04-24 09:38 GMT
  • ஊக்கத்தொகையை தாமதமின்றி வழங்க கோரிக்கை
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் நாகர் கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தன்னார்வலர்கள் என்பதை ஊழியர்கள் என பெயர் மாற்றி அங்கீகரிக்க வேண்டும், ஊக்கத் தொகையை மாதந்தோறும் தாமதமின்றி வழங்க வேண்டும், ஊதியமாக நிர்ணயம் செய்து காலத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒரே சீரான பணி நேரத்தை நிர்ணயம் செய்து முழு நேர ஊழியராக்க வேண்டும், அரசு விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களை விடுப்பாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விக்னேஸ்வரி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன், தமிழ்ச்செல்வி, இந்திரா, சந்திரபோஸ், சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

Tags:    

Similar News