உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபடுவதற்காக மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள்

Published On 2022-08-15 08:00 GMT   |   Update On 2022-08-15 08:00 GMT
  • தக்கலையில் கைதான 2 பேர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி வழிப்பறி சம்ப வங்கள் நடப்பதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தக்கலை அழகிய மண்ட பம் பகுதியில் இன்ஸ் பெக்டர் நெப்போலி யன், சப் -இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமை யிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பல இடங்களில் திருட்டு, வழிப்ப றியில் ஈடுபட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் நவீன் ஆண்டனி ராஜ் (வயது 24), வினித் (20) என தெரிய வந்தது.

அவர்கள் குலசேகரம், திருவட்டார் பகுதிகளிலும் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வழிப் பறியில் ஈடுபட்டால் போலீ சில் சிக்கி விடு வோம் எனக் கருதிய கொள்ளையர்கள் அடிக்கடி மோட்டார் சைக்கிள்களை மாற்றி உள்ளனர்.

இதற்காக மோட்டார் சைக்கிள்களையும் திருடி உள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருமங்கலம், நெல்லை உள்பட பல பகுதிகளில் இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News