உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

Published On 2022-10-16 08:12 GMT   |   Update On 2022-10-16 08:12 GMT
  • உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 52) தொழிலாளி. கடந்த 3-ந் தேதி இரவு இவர் உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயமடைந்த ஸ்டீபனை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி ஜெபிதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News