உள்ளூர் செய்திகள்

திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்தியா ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம்

Published On 2023-10-03 07:54 GMT   |   Update On 2023-10-03 07:54 GMT
  • ற்றூர் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி சந்திப்பு வரை இந்தியா ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
  • முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவட்டார் :

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி யில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப யணம் கடந்த ஆண்டு மேற்கொண்டார். நடைப யணம் மேற்கொண்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை யொட்டி திருவட்டார் கிழக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆற்றூர் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி சந்திப்பு வரை இந்தியா ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார், காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், மாவட்ட பொதுச்செயலா ளர் ஜான் இக்னேசியஸ், மாவட்ட செயலாளர்கள் பெனட், ஆற்றூர் குமார், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News