உள்ளூர் செய்திகள்

கரும்பாட்டூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

Published On 2023-10-03 07:39 GMT   |   Update On 2023-10-03 07:39 GMT

தென்தாமரைகுளம் :

கரும்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டப் பணிக்கன் தேரி விளையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தங்க மலர் சிவபெருமான் தலை மையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப் பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதி க்கப்பட்டு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உதவி மருத்துவர் சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் ரஜினி, கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், கால் நடை மருத்துவர் ஆசீர் எட்வின், ஊராட்சி துணை தலைவர் தமிழரசி, வார்டு உறுப்பினர்கள் ஞான வடிவு, அரிஹர சுதன், ஞானராணி, ஆல்வின் ராஜபால், கீதா, ராஜ்குமார், நாகம்மாள், மணிகண்டன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் காளி யப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News