உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-08-05 07:24 GMT   |   Update On 2022-08-05 07:24 GMT
  • பாளையங்கோட்டை ஜெயிலில் அடைப்பு
  • ஜனவரி மாதம் முதல் இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மேலும் ஒரு கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அறுகுவிளை பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 45). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந் துக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அரவிந்த் கஞ்சா வியாபாரி சுயம்புலிங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து சுயம்புலிங்கம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையடுத்து அவரை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News