உள்ளூர் செய்திகள்

வில்லுக்குறி அருகே மூதாட்டி மாயம்

Published On 2022-08-21 07:21 GMT   |   Update On 2022-08-21 07:21 GMT
  • வில்லுக்குறி திருவிடைக்கோட்டில் வசித்து வரும் சகோதரியை பார்க்க சென்றவர் வீடு திரும்பவில்லை
  • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

தக்கலை கொல்லம் விளையை சேர்ந்த மணி மனைவி சைலஜா (வயது59). இவர் வில்லுக்குறி திருவிடைக்கோட்டில் வசித்து வரும் சகோதரியை பார்க்க சென்று உள்ளார். அதன் பிறகு சைலஜா வீடு திரும்ப வில்லை.

இது குறித்து அவரது மகன் கோலப்பன் (37) இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News