உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-08-06 07:21 GMT   |   Update On 2023-08-06 07:21 GMT
  • செல்போனில் எப்போதும் மூழ்கி இருந்து வந்தார்
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்

கன்னியாகுமரி :

திருவட்டார் அருகே கல்லாம்பொற்றைவிளை, செறுகோல் பகுதியை சேர்ந்தவர் கணேசன், தொழிலாளி. இவரது மனைவி அதே பகுதியில் முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுஜின் (வயது 20) தனியார் கல்லூரியில் டி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் காலையில் பஸ்சில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தனது செல்போனில் எப்போதும் மூழ்கி இருந்து வந்தார். படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் கணேசன் கண்டித்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே சுஜின் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News