உள்ளூர் செய்திகள்
குலசேகரம் பேரூராட்சியில் தூய்மை பணி
திருவட்டார், ஜூன்.12-
குலசேகரம் பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கல்வெட்டான்குழி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை போன்ற இடங்களில் தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.
இதனை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், வார்டு கவுண்சிலர்கள் சுபாஷ் கென்னடி, ராகிலாபீவி, ரபீக்காபீவி, மேரி ஸ்டெல்லா, ரெத்தினபாய், லதாபாய், ஏஞ்சல்ஜெனி மற்றும் பேரூராட்சி தூய்மை பணிகளில் பலர் கலந்து கொண்டு புல்வெட்டி தூய்மை படுத்தினார்கள்.