உள்ளூர் செய்திகள்
வடசேரி பஸ் நிலையத்தில் தூய்மைப்படுத்தும் பணி
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ள நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் தூய்மை பணியை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த எந்திரத்தின் மூலமாக கழிவறைகள் நவீன முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மேயர் மகேஷ் பொன்னப்ப நாடார் காலனியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான சாலை பணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணை யாளர் ஆனந்த மோகன்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . வ.உ.சி. பிறந்த நாளையொட்டி தாழக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.