உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை

Published On 2022-11-06 07:17 GMT   |   Update On 2022-11-06 07:17 GMT
  • கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
  • மேலும் பல திருட்டு வழக்குகளின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை

நாகர்கோவில்:

நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம் 7-ந் தேதி சங்கரநாராயணன், பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்தார். அவரது மனைவி பிருந்தா, தனது குழந்தையுடன் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இதனை அறிந்த யாரோ சிலர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 62¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நட மாடி யது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் துைண சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் போலீசார், அந்த நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் பகுதி யைச் சேர்ந்த சாந்தகுமார் (29), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிவ குமார் (25) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். அதன்படி 2 பேரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கைதான சாந்தகுமார், சிவகுமார் பற்றி தீவிரமாக விசாரித்த போது, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் திருட்டு வழக்கு களில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News