உள்ளூர் செய்திகள்

மஞ்சாலுமூடு-மாலைக்கோடு வரை குண்டும் குழியுமான சாலை

Published On 2022-06-09 10:01 GMT   |   Update On 2022-06-09 10:01 GMT
  • இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு திருவனந்தபுரத்திற்கு எளிதாக செல்லும் சாலையாகும்.
  • பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது

கன்னியாகுமரி:

அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலிருந்து மாலைக்கோடு வரையிலான சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலைக்காக பல ஆண்டுகாலமாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குமுறலுடன் இருக்கின்றனர்.

இச்சாலையானது தமிழக அரசு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்தி ரிகளுக்கு கேரளாவுக்கு (திருவனந்த புரம்) எளிதாக செல்லும் சாலையாகும்.

தற்போது பெய்துவரும் தொடர்மழையால் சாலையில் நீர் தேங்கி குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலையை காலம் கடத்தாமல் உடனடியாக சீர்செய்ய நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகத்தையும் பொதுமக்களும் அரசிய கட்சியினரும் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News