உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே தோழியிடம் 20 பவுன் நகையை பறிகொடுத்த இளம்பெண்

Published On 2023-10-09 07:04 GMT   |   Update On 2023-10-09 07:04 GMT
  • புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை
  • அனு பிரியா தனது கணவருக்கு தெரியாமல் 20 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது

தக்கலை :

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி அனுபிரியா (வயது 32). அழகு கலைஞரான இவருக்கு திருவிதாங்கோடு பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்தப் பெண், மற்றொரு அழகு நிலையம் தொடங்குவதாக கூறி ரூ. 5 லட்சம் கேட்டாராம். இதனால் அனு பிரியா தனது கணவருக்கு தெரியாமல் 20 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தப் பெண் நகையை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அது கவரிங் நகை என அறிந்த அனுப்பிரியா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் 5 மாதமாக அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அனுபிரியா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News