கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 3600 கி.மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் காரில் கடக்கும் சாதனை பயணம்
- மாவட்ட விளையாட்டு அலுவலர் தொடங்கி வைத்தார்
- சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது
கன்னியாகுமரி:
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சபீர் (வயது27). இவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 58 மணி நேரத்தில் 3ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்தை காரில் கடந்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.
இதனை முறியடிக்கும் வகையில் கன்னியா குமரியில் இருந்து காஷ்மீருக்கு அதே தூரத்தை 48 மணி நேரத்தில் கடக்க சபீர் திட்டமிட்டார். அதன்படி அவரது சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி 4 வழி சாலை முடிவடையும் சீரோ பாயிண்ட் பகுதியில் நடந்தது.
அவரது சாதனை பய ணத்தை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர் டேவிட் டேனியல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சபீர், தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக பல்வேறு மாநிலங்களை கடந்து 3600 கிலோ மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் கடந்து காஷ்மீர் சென்றடைகிறார்.
இதன் மூலம் இவரது சாதனை பயணம் சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது புத்தகத்தில் இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.